Ad Widget

சிறுமி வன்புணர்வு; அடையாள அணிவகுப்பில் எவரும் அடையாளம் காட்டப்படவில்லை

judgement_court_pinaiகாரைநகர் சிறுமிகள் இருவரை வல்லுறவுக்கு உட்படுத்தினர் என சந்தேகிக்கப்படும் கடற்படைச் சிற்பாய்கள் 37பேர் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் எவரும் அடையாளம் காட்டப்படவில்லை.

காரைநகர் ஊரிக்கிராமத்தை சேர்ந்த 11வயது மற்றும் 9 வயது சிறுமிகள் இருவர் கடற்படையினரால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டனர் என சந்தேகிக்கப்படும் கடற்படை சிப்பாய்கள் இன்று மாலை சிறுவர் நீதிமன்ற நீதவான் க. ஜீவராணி முன்னிலையில் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டனர்.

இவர்களை அடையாளம் காண அழைத்துவரப்பட்ட சிறுமி அவர்கள் எவரையும் அடையாளம் காட்டவில்லை. எனினும் சிறுமியின் வீட்டிற்கு அண்மையில் உள்ள முகாமைச் சேர்ந்த கடற்படை சிப்பாய்கள் 7 பேரை எதிர்வரும் 21ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Related Posts