Ad Widget

சிரியாவின் குர்த் அகதிகள் துருக்கி வரும் எண்ணிக்கை அதிகரிக்கிறது

சிரியாவில் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகள் படையெடுத்து முன்னேறிவருவதை அடுத்து அங்கிருந்து தப்பித்து எல்லை தாண்டி துருக்கிக்குள் நுழையும் சிரியாவின் குர்த் இன மக்களின் எண்ணிக்கை கடந்த மூன்று நாட்களில் ஒரு லட்சத்து முப்பதாயிரத்தை தாண்டியுள்ளது என துருக்கி அரசு கூறுகிறது.

turkey_syria_irack

சண்டையிலிருந்து தப்பித்து உயிர்பிழைக்க சிரியாவின் குர்த் இனத்தார் முயலுகின்றனர்

மூன்று ஆண்டுகளுக்கு முன் சிரியாவில் யுத்தம் ஆரம்பித்ததிலிருந்து ஒரு சிறிய காலப்பகுதியில் அங்கிருந்து மக்கள் வெளியேறியதில் மிக அதிக எண்ணிக்கை இதுதான் என ஐநா கூறுகிறது.

கூடுதலாக லட்சக்கணக்கான அகதிகள் வரக்கூடிய மேலும் மோசமான ஒரு சூழலுக்கு ஆயத்தமாகி வருகிறது என அந்நாட்டின் துணைப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

சிரியாவிலிருந்து வந்த அகதிகள் பத்து லட்சத்துக்கும் அதிகமானோருக்கு அடைக்கலம் தந்து துருக்கி ஏற்கனவே திணறிக்கொண்டுள்ள்து.

துருக்கியுடனான சிரியாவின் எல்லையில் உள்ள கோபானி என்ற ஊரிலிருந்து பத்து பதினைந்து கிலோமீட்டர் நெருக்கத்துக்கு இஸ்லாமிய அரசு ஆயுததாரிகள் வந்துவிட்டதாகவும், இந்த ஊரை அவர்கள் பிடித்தால், அப்பகுதியின் முழுக் கட்டுப்பாடும் அவர்கள் கைகளுக்குப் போய்விடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts