சவூதி அரேபியாவில் சட்டவிராதேமாக தங்கியிருக்கும் சுமார் 3 ஆயிரத்து 500 இலங்கையர்கள் நாடு திரும்பவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
தொழிலுக்காக சவூதிக்கு சென்று அவர்களது ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னரும் அந்த நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்களே அங்கிருந்து இவ்வாறு நாடு திரும்பவுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி முதல் ஜூன் 25ஆம் திகதி வரை சவூதி அரேபியாவில் சட்டவிராதேமாக தங்கியிருப்போருக்கு சவூதி அரேபியா பொது மன்னிப்பு வழங்கியிருந்தது.
இந்நிலையில் இதன்காலம் முடிவடையவுள்ள நிலையில், சட்டவிராதேமாக தங்கியிருப்போர் நாடு திரும்ப தயாராகியுள்ளனர்.