தேர்தல் தோல்வியை அடுத்து சதித்திட்டத்தினூடாக ஆட்சியை தக்கவைக்க முயன்ற மஹிந்த ராஜபக்ஷ மேற்குலகம் உட்பட முழு சர்வதேசமும் காட்டிய எதிர்ப்பு மற்றும் அழுத்தம் காரணமாகவே அலரிமாளிகையிலிருந்து ஓடினார் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட வேட்பாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து நடாத்திய பொதுக்கூட்டத்தில் தொடர்ந்து பேசிய அவர்,
தேர்தலை மாற்றியமைக்க சகல அதிகாரங்களையும் பாவித்த ராஜபக்ஷவுக்கு சர்வதேசம் 3 மணித்தியாலங்களுக்குள் அலரிமாளிகையிலிருந்து வெளியேறவேண்டும் என விடுத்த அச்சுறுத்தலினாலேயே மஹிந்த அலரி மாளிகையை விட்டு வெளியேறிச் சென்றார் எனவும் குறிப்பிட்டார்.