Ad Widget

சமூகச் சீரழிவுச் செய்திகளை தவிருங்கள்

வடபுலத்தில் பலாத்காரம், வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பான செய்திகளே பத்திரிக்கைகளில் அதிகம்பிரசுரிக்கப்படுகின்றது. எனவே இவ்வாறான சமூகச் சீரழிவுச் செய்திகளை தவிர்த்து நல்ல செய்திகளை பத்திரிக்கைகளில் அதிகம் பிரசுரிக்குமாறு வடமாகாண கல்வி அமைச்சின் உதவி செயலாளர் சுகந்தி செபஸ்ரின் தெரிவித்தார்.

இன்று காலை வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலைகளில் இடம்பெற்ற சிறந்த பெறுபேறுகளுக்கான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் வடபுலத்தில் சமூகச் சீரழிவுகள் அதிகம் இடம்பெறுகின்றது.இவ்வாறான சமூகச் சீரழிவுகள் தொடர்பாக
மாணவர்கள் விழிப்பாக இருத்தல் வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts