Ad Widget

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய செயற்பாடுகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!!

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மசகு எண்ணெய்யை கொள்வனவு செய்வதை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்த நிலையில் மேற்படி சப்புகஸ்கந்த எண்ணை சுத்திகரிப்பு நிலையம் கடந்த நவம்பர் 15 அன்று மூடப்பட்டது.

தொடர்ச்சியாக 50 தினங்களுக்கு மேற்படி சுத்திகரிப்பு நிலையம் மூடப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில் அந்த தீர்மானம் மாற்றப்பட்டு அதற்கிணங்க 22 தினங்களுக்கு பிறகு இன்றைய தினம் மேற்படி சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் திறக்கப்படவுள்ளது.

அதேவேளை, எரிபொருளை தட்டுப்பாடின்றி விற்பனை செய்யும் வகையில் மேலும் ஒரு தொகை எரிபொருள் நாட்டுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ள நிலையில் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் செயற்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Related Posts