Ad Widget

சத்தியாக்கிரகப் போராட்டத்தை கைவிட்டார் தம்பிராசா

Thambirajahவலி. வடக்கு மற்றும் சம்பூர் மக்களின் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி கடந்த 21ஆம் திகதி முதல் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் சத்தியாக்கிரகப் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் முத்தையாப்பிள்ளை தம்பிராசா, 21 நாட்களின் பின்னர் தனது போராட்டத்தினை கைவிட்டுள்ளார்.

மேற்படி விடயங்களை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் எதிர்வரும் வாரங்களில் மேற்கொள்ளப்படவிருக்கின்ற மாபெரும் போராட்டங்களினாலேயே தான் இந்தப் போராட்டத்தினைக் கைவிடுவதாக தம்பிராசா தெரிவித்தார்.

தம்பிராசா சத்தியாக்கிரகப் போராட்டத்தினை மேற்கொண்டு வந்த போது, கடந்த புதன்கிழமை (05) அவரது சத்தியாக்கிரக கொட்டகை காணாமற்போயிருந்தது. இது தொடர்பாக தம்பிராசா யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

தம்பிராசாவின் போராட்டக் கொட்டகையை காணவில்லை!

Related Posts