சாவகச்சேரி, தனங்களப்பு – சங்குப்பிட்டிப் பாலத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 2.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த நால்வரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இரு மோட்டார் சைக்கிள்களும் வேகக்கட்டுப்பாட்டினை இழந்த நிலையில் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்துக் குறித்து சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.