Ad Widget

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கான இறுதி விண்ணப்ப திகதி இன்று!!

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி தினம் இன்றாகும்.

எனவே பரீட்சார்த்திகள் விண்ணப்பங்களை கல்வியமைச்சின் இணையத்தளம் மூலமாக இன்றைய தினத்துக்குள் சமர்ப்பிக்கலாம் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன அறிவித்துள்ளார்.

இதற்கு முன் இரண்டு முறை அதாவது பெப்ரவரி 3 மற்றும் 10 ஆகிய திகதிகளில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts