Ad Widget

கோரோனாவால் இன்று உயிரிழந்தவருக்கு வேறு நோய் இல்லை – சுகாதார அமைச்சு

இலங்கையில் கோரோனா தொற்றால் உயிரிழந்தவர் வேறு எந்தவொரு நோயாலும் பாதிக்கப்படாதவர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

இத்தாலி நாட்டிலிருந்து திரும்பிய ஹோமாகமவைச் சேர்ந்த 44 வயதுடையவர் இன்று அதிகாலை வெலிக்கந்தை வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

“இத்தாலியிலிருந்து மார்ச் மாத முற்பகுதியில் நாட்டுக்கு வருகை தந்த அவர், தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டார்.

கடந்த 23ஆம் திகதி கோரோனா தொற்றுக்குள்ளாகியதாக வெலிகந்தை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும் அவரது உடல்நிலை கடுமையானதால் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

எனினும் அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலைக்குச் சென்ற நிலையில் இன்று (ஏப்ரல் 4) சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.

அவருக்கு கோரோனா வைரஸ் தொற்றுத் தவிர்ந்த வேறு எந்தவொரு நோய் தாக்கமும் இல்லை” என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜெயசிங்க தெரிவித்தார்.

Related Posts