புத்தூர் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கோடரித் தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதியவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த ஒருவர், உறக்கத்திலிருந்த வயோதிபரின் காலை கோடரியால் கொத்தியுள்ளார்.
பணக் கொடுக்கல் – வாங்கல் விடயத்தில் இருந்த தகராறு காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.