Ad Widget

கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த இ.போ.ச பேரூந்து மீது கல்வீச்சு

attack-attackகொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்து மீது இக்கிரிக்கொல்லாவையில் வைத்து நேற்றிரவும் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சாரதியான அல்வாய் பகுதியினைச் சேர்ந்த எஸ்.யோகராஜா (45) காயமடைந்துள்ளார்.

கல்வீச்சுத் தாக்குதலினால் பேரூந்தின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து நொருங்கியுள்ளதுடன் சாரதிக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள சாரதி முதலுதவியினை செய்துவிட்டு, பயணிகளுடன் பருத்தித்துறையை இன்றுக்காலை வந்தடைந்தார்.

யாழ். – கொழும்பு பேரூந்துகள் மீது மதவாச்சி பிரதேசங்களில் வைத்து அண்மைகாலமாக பரவலாக கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts