Ad Widget

கொரோனா வைரஸ் தாக்கம் : கொழும்புக்கு வரும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை!!!

கொரோனா வைரஸ் காரணமாக கொழும்புக்கு வரும் அனைவரையும் மூக்கு கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், நெரிசலான பகுதியில் கூடும் அனைவரும் முகத்திற்கு மூக்கு கவசம் அணியுமாறு கொழும்பு தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்தார்.

கொழும்பு நகரத்தில் உள்ள பொது இடங்கள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்குள் நுழையும்போது இந்த முறையை பின்பற்றவும் ஊழியர்களுக்கு முகமூடி அணியவும் அறிவுறுத்தப்படுகிறது.

இதேவேளை, கொழும்பு தொற்றுநோயியல் பிரிவின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர நோயைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில், “புதிய கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவும் திறன் கொண்டது. இந்த நோய் பிற நாடுகளுக்கும் பரவுவதால் இலங்கைக்கு பரவாமல் தடுக்க பொது சுகாதார நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதற்கான முன்நிபந்தனைகள் இலங்கை விமானநிலையங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றில் இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு விமானம் குறித்து விளக்கமளிக்கப்படுவதோடு, அதிக காய்ச்சல், இருமல், சளி மற்றும் சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் இருந்தால் விமான நிலைய சுகாதாரத் துறைக்குத் தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விமான நிலையத்தின் சுகாதார பிரிவு 24 மணி நேரமும் இயங்குகிறது. இலங்கைக்கு வரும் பயணிகளிடையே காய்ச்சல் உள்ளதா என்பதை கண்டறிய ஸ்கானர்கள் நிறுவப்பட்டுள்ளன” என மேலும் அந்த அறிக்ககையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts