Ad Widget

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் மேலும் 27 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 14 ஆண்களும், 13 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கு குறைவான ஆணொருவரும் உள்ளடங்குவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 641 ஆக அதிகரித்துள்ளது.

Related Posts