Ad Widget

கொடுக்காத தண்ணிக்கு காசு கேட்கும் அதிகாரிகள்

ஊர்காவற்றுறை பருத்தியடைப்பு கிராமத்தில் குழாய் மூலமான குடிநீர் தற்போது நீண்டகாலமாக தமக்கு வழங்கப்படாமலே நீர்வழங்கல் அதிகார சபையினால் மாதாந்தோறும் குடிநீரிற்கான பட்டியலானது அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது என கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.

தமது கிராமத்தில் நீர்விநியோகம் நீர்வழங்கல் அதிகார சபையினால் நிறுத்தப்பட்டமையினால் கல்விகற்க செல்லும் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வது மற்றும் அன்றாட செயற்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

இப் பிரச்சினை தொடர்பாக உரிய அதிகாரிகள் விரைவாக நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Posts