Ad Widget

கொடிகாமம் பகுதியில் இருவருக்கு வாள்வெட்டு

மந்துவில் மேற்கு கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்தவர்கள், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

“திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில், மந்துவில் பகுதியினை சேர்ந்த நந்தகுமார் லிங்கேஸ்வரன் (வயது 24), மற்றும் அதே பகுதியினை சேர்ந்த கிறிஸ்தோபர் தினேஷ் (வயது 28) ஆகிய இருவருமே வாள் வெட்டு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்” என, பொலிஸார் குறிப்பிட்டனர்.

தனிப்பட்ட பகை காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் 11 பேர் தொடர்புபட்டிருந்ததாக காயமடைந்தவர்கள், கொடிகாமம் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

Related Posts