Ad Widget

கொக்குவில் பகுதியில் பெற்றோல் குண்டு வீசிய ஆவா குழுவைச்சேர்ந்த இருவர் கைது!

கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது, பெற்றோல் குண்டு வீசிய இருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் இருவரும் யாழ். கொக்கட்டி பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார், இதில் ஒருவர் ஆவாக் குழுவுடன் தொடர்புடையவர் என தெரிவித்துள்ளனர். மேலும், இச்சம்பவத்தின் பின்னணி குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, குறித்த வீட்டிற்கு சென்ற இருவரும், வீட்டின் உரிமையாளரின் பெயரை கேட்டு, வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசியதுடன் வீட்டினையும் உடைத்துள்ளனர்.

இதனையடுத்து, அருகில் இருந்தவர்களால் இருவரும் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related Posts