Ad Widget

கைத் தொலைபேசி விற்பனை நிலையங்களுக்கு எச்சரிக்கை!

கைத் தொலைபேசிகள் மற்றும் உதிரிப் பாகங்களை விற்பனை செய்யும் நிலையங்களுக்கு அனுமதிப் பத்திரம் இன்றி இயங்கும் நிலையங்களுக்கு முற்றுகையிடவுள்ளதாக தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இந்த மாதத்தின் இறுதி வாரம் முதல் நாடு பூராகவும் சுற்றி வளைப்பு நடவடிக்கையை முன் எடுக்கவுள்ளதாக தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

கையடக்கத் தொலைபேசி மற்றும் அதன் பாகங்களை விற்பனை செய்யும் இடங்களை பதிவு செய்து கொள்வதற்காக மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து , குறித்த விற்பனை நிலையங்கள் பல தற்போது பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது வரை பதிவு செய்யப்படாத விற்பனை நிலையங்கள் எதிர்வரும் சில தினங்களுக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

பதிவு செய்யப்படாத கைத் தொலைபேசிகள் மற்றும் உதிரிப் பாகங்களை விற்பனை செய்யும் நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related Posts