Ad Widget

கைதிகளை எரியூட்டியதாக கூறப்படும் இடங்கள் பார்வை

விடுதலைப் புலிகளின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்டவர்கள் எரியூட்டப்பட்டதாக கூறப்படும் இடங்களை கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் நேற்று (19) நேரில் சென்று பார்வையிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஓட்டிசுட்டான் பகுதியில் அமைந்துள்ள இந்திமடு, சமளன்குளம் ஆகிய இடங்களை நீதவான் சென்று பார்வையிட்டார்.

நீதவானுடன் கொழும்பிலிருந்து வருகை தந்த பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் குழுவும் சென்றிருந்தது.

அதேபோல், இன்ற வியாழக்கிழமை (20) மேலும் ஒரு இடத்தையும் நீதவான் சென்று பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts