வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த கூட்டுறவு அமைப்புகளும் கூட்டுறவுத் தொழிற்சங்க அமைப்புகளும் இணைந்து இம்முறை மேதினத்தைக் கூட்டுறவுமேதினமாக யாழ்ப்பாணத்தில் கொண்டாடவுள்ளன.
வெள்ளிக்கிழமை (01.05.2015) பிற்பகல் 2 மணிக்கு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இருந்து யாழ் வீரசிங்கம் மண்டபத்தை நோக்கி கூட்டுறவாளர்களின் மேதின எழுச்சிப் பேரணி நடைபெறும் எனவும், 4.30 மணிக்கு வீரசிங்கம் மண்டபத்தில் பொதுக்கூட்டம் இடம்பெறும் எனவும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளும் இம் மேதின நிகழ்ச்சிக்கு கூட்டுறவுக்குப் பலம் சேர்க்கும் வகையில் அனைவரையும் அணிதிரளுமாறும் ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.