Ad Widget

குருநகர் பகுதியில் 60 இலட்சம் பெறுமதியான கேரளா கஞ்சா மீட்பு

குருநகர் பகுதியில் 60 இலட்சம் பெறுமதியான 40 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

kanja

குறித்த நபர் நேற்று திங்கட்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருகநர் பகுதியில் உள்ள வீடொன்றில் கஞ்சா இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன வின் விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் அதனை வீட்டில் வைத்திருந்த உரிமையாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts