Ad Widget

குருணாகலில் 3 பள்ளிவாசல்கள் மீது இன்று அதிகாலை தாக்குதல்

குருணாகல் மாவட்டத்தில் மூன்று பள்ளிவாசல்கள் மீது இன்று (13) திங்கட்கிழமை காலை இனந்தெரியாதோரால் தாக்குதல்கள் நடப்பட்டுள்ளன.

கின்னியம மஸ்ஜிதுல் தக்வா ஜும்மா பள்ளிவாசல் , மஸ்ஜிதுல் அப்ரார் தக்கியா பள்ளிவாசல் மற்றும் மஸ்ஜிதுல் ஆயிஷா தக்கியா பள்ளிவாசல் ஆகியவை மீதே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

தாக்குதல் நடத்தியோர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, சிலாபத்தில் நேற்று ஏற்பட்ட குழப்பநிலையை அடுத்து சிலாபம் நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts