Ad Widget

கிளிநொச்சி யுவதி படுகொலை: உடற்கூற்று பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்

கிளிநொச்சியில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பான உடற்கூற்றுப் பரிசோதனை யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், குறித்த பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இடது புற கண்ணுக்கு மேற்பகுதியில் குத்தப்பட்ட உட்காயம் ஒன்று இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அவர் ஐந்து மாத கர்ப்பிணி எனவும் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகித்த நிலையில் கொலைசெய்யப்பட்ட அன்று அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லையென்றும் தெரிவிக்கப்படுள்ளது.

உடற்கூறுப் பரிசோதனை முடிவடைந்த நிலையில் இறுதிக் கிரிகைகளுக்காக அவரது சடலம் தந்தையாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபரின் பணிப்பில் அமைக்கப்பட்டுள்ள விசேட பெரும் குற்றப் பிரிவு குழுவினர் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

குறித்த பெண் பயன்படுத்திய கைத்தொலைபேசியின் தரவுகள், பொலிஸாரால் சந்தேக நபர்களாக கணிக்கப்பட்டுள்ளவர்களின் கைத்தொலைபேசியின் தரவுகள் மற்றும் பொலிஸாருக்குத் தேவையான இடங்களில் உள்ள கண்காணிப்புக் கமெராக்களின் பிரதியினைப் பெறுவதற்கான நீதிமன்ற அனுமதியினை நேற்றையதினம் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts