Ad Widget

கிளிநொச்சி மாவட்ட வெளிக்கள பெண் உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட வெளிக்கள பெண் அரச உத்தியோகத்தர்களுக்கு ஜம்தாயிரம் ரூபாவிற்கு மோட்டார் சைக்கிள் வழங்குவதில் உள்ள தாமதம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஆகியோரின் கவனத்திற்கு குறித்த உத்தியோகத்தர்களினால் கொண்டுவரப்பட்டது.

bike-kilinochchi-1

bike-kilinochchi-2

இதனையடுத்து அரச வெளிக்கள பெண் உத்தியோகத்தர்களுக்கும் விரைவாக மோட்டார் சைக்கிள்களை வழங்கும் வகையில் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர் உரிய தரப்புக்களுடன் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுத்தமைக்கு அமைவாக நேற்றயதினம் (25) முதற்கட்டமாக 200 பெண் உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று காலை மோட்டார் சைக்கிள் வழங்கும் வைபவம் இடம்பெற்றது. ஏனையவர்களுக்கும் அடுத்து வரும் நாட்களில் தொடர்ச்சியாக வழங்கப்படவுள்ளது.

Related Posts