கிளிநொச்சி மாவட்ட அரசாங்க வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் வைபவம் கிளிநொச்சியில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிறீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு மோட்டார் சைக்கிள்களை வழங்கினா்.
பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார்,மாவட்ட செயலக திட்டப்பணிப்பாளர் மோகனபவன்,பிரதித்திட்டப் பணிப்பாளர், வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவநாதன், கிளிநொச்சி மாவட்ட பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மக்களுக்கான சேவைகளை இலகுபடுத்தி விரைவான சேவைகளை வழங்கக்கூடிய வகையில் அரசின் கொள்கைத் திட்டங்களுக்கு அமைவாகவே வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு இந்த மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றது.