Ad Widget

கிளிநொச்சி தமிழரசுக்கட்சி உறுப்பினர்களை எதிர்க்கட்சித் தலைவர் சந்தித்தார்

கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது.

கொள்கைபரப்புச் செயலாளர் வேளமாளிதன் தலைமையில் ஆரம்பமான இக் கலந்துரையாடலில் கிளிநொச்சியின் அரசியல் மற்றும் அபிவிருத்தி சம்பந்தமான பல்வேறு கருத்துக்கள் கலந்துரையாடப்பட்டன.

இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், மாகாணசபை உறுப்பினர்கள் கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts