Ad Widget

கிளிநொச்சியில் புகையிரதம் தாமதம்! பயணிகள் சிரமம்!

இன்று (19) அதிகாலை ஐந்து நாற்பத்தைந்து மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்ட கடுகதி புகையிரதம் முறுகண்டிப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த பொழுது மாடு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்பொழுது மாடு இறந்ததுடன் புகையிரதத்தின் முன்பகுதியில் (Baffer) பகுதியில் சேதம் ஏற்ப்பட்டமையால் புகையிரத்ததை நகர்த்துவதில் சிரமம் ஏற்பட்டிருந்தது.

அதனை பின்னர் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டு இலங்கை புகையிரத சேவைப் பணியாளர்களினால் பவர்ரினைக் கழற்றி சீர்செய்ததன் பின்னர் குறித்த பாகத்தையும் புகையிரதத்தில் ஏற்றி தாமதமாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்தது.

முற்பகல் 11.05 இற்கு கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய கடுகதி புகையிரதம் பிற்பகல் 12.40 அளவிலேயே புறப்பட்டது இதனால் பயணிகள் பெரும் சிரமங்களுக்கு உள்ளானர்கள்.

Related Posts