Ad Widget

கிளிநொச்சியில் சிறிதரனிற்கு எதிரான சுவரொட்டிகள்? : சூடு பிடிக்கும் மலையக மக்கள் விவகாரம்

மலையக மக்களை பிரதேச ரீதியாக ஒடுக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனிற்கு எதிரானவை எனக் கருதப்படும் சுவரொட்டிகள் கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.

கரைச்சி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம், இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், இவ்வாறு விமர்சிக்கப்படும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளான கிளிநொச்சி டிப்போ சந்தி, கரைச்சி பிரதேச செயலகம் உள்ளிட்ட பகுதிகளில் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், மலையக மக்களை பிரதேச ரீதியாக ஒடுக்கும் வகையில் தொலைப்பேசியில் உரையாடியது நிரூபிக்கப்பட்டால் தன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினைத் துறப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts