Ad Widget

கிளிநொச்சியில் கைக்குண்டு மீட்பு – பொலிஸார் விசாரணை

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாறு பகுதியில் கைக்குண்டு, ஆர்.பி.ஜி செல் ஆகியன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

பெட்டி ஒன்றில் வைத்து வீடொன்றிற்கு முன்னாள் இவை வைக்கப்பட்டிந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதன்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பு கைக்குண்டு, ஆர்.பி.ஜி செல் ஆகியனவே மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னனெடுத்து வருகின்றனர்.

Related Posts