கிளிசொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் குளிக்க சென்ற மாணவிகள் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த ச.தாட்சாயினி (வயது 17), இவரது சகோதரியான ச.நவதாரணி (வயது 11), விநாயகபுரத்தைச் சேர்ந்த எஸ்.நிசாந்தினி (வயது 19) ஆகியோரே குளத்தில் உள்ள சகதியில் சிக்கி உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
குளத்தில் குளிப்பதற்காக நான்கு பெண்கள் சென்றதுடன் அதில் மூவர் உயிழந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஒருவரை இதுவரை காணவில்லை எனவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது நிலவி வரும் வறட்சியினால் குறித்த மாணவிகளின் வீட்டில் உள்ள கிணறுகள் வற்றிய நிலையிலே குறித்த நால்வரும் குளத்தில் குளிக்க சென்றதாக உறவினர்கள் தெரிவித்தனர்.