Ad Widget

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இளம் பெண் சாவு!

கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் இன்று புதன்கிழமை 9.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளம்பெண் ஒருவர் பலியானார்.

முல்லைத்தீவிலிருந்து வவுனியாநோக்கி சென்ற தனியார் பஸ், இ.போ.ச. பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்டபோது கிளிநொச்சியில் இருந்து பரந்தன் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த இந்தப் பெண்ணை தனியார் பஸ் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி பலியானார்.

பெரியபரந்தன், கிளிநொச்சியைச் சேர்ந்த ஜெ.சித்திராதேவி (வயது 23) என்ற இளம் குடும்பப் பெண்ணே உயிரிழந்தவராவார்.

சடலம் பிரேத பரிசோதனைக்கான கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts