Ad Widget

கிளிநாச்சியில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் ஆகியவற்றை எதிர்த்து போராட்டம்!

இலங்கையில் தற்போது பயங்கரவாதம் இல்லை என அரசு அறிவித்த போது ஏன் இன்னும் பயங்கரவாத தடைச் சட்டத்தை மாத்திரம் நடைமுறையில் வைத்திருக்கிறது எனத் தெரிவித்து கிளிநொச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி யாழ்,முல்லைத்தீவு வவுனியா மாவட்ட மக்கள் சிலர் இணைந்து இன்று கிளிநாச்சியில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் ஆகியவற்றை எதிர்த்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த போராட்டம் இன்று(20-02-2019) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது. நாட்டில் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தையும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தையும் கண்டித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது,

கிளிநொச்சி மக்களின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிளிநாச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் ஏ9 வீதியால் டிப்போ சந்திவரை சென்றடைந்தது.

போராட்டத்தல் கலந்துகொண்டவர்கள் அரசே சிரிஏ யின் ஊடாக பெண்களின் உரிமைகளை பறிக்காதே, நாட்டு மக்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்காதே, பெண்களின் விடுதலையே நாட்டின் விடுதலை. சிறுபான்மையினரை இலக்கு வைக்கும் பொறியே பயங்கரவாத தடைச்சட்டம், மக்களின் பிரதிநிதிகளே பிரிஏ,சிரிஏ பற்றி மக்களிடம் கேளுங்கள் என கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

Related Posts