Ad Widget

கிராமத்தில் உள்ள அனைத்து ஆண்களுக்கும் தூக்கு தண்டனை!

ஈரான் நாட்டில் அமைந்துள்ள சிஸ்டான் கிராமத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் போதை பொருள் கடத்தியதாக தூக்கு தண்டனை விதிக்கபட்டு உள்ளது.

Iran-executed-all-adult-men-in-one-village-for-drug_SECVPF

இந்த சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமைகள் குழுவுனர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

வளர்ச்சி திட்டங்கள் எதையுமே முன்னெடுக்காத அரசால் பொதுமக்களின் வாழ்வாதார பிரச்சனைகளை சீர்செய்ய முடியவில்லை, இதனால் வாழ்வாதாரம் தேடிய மக்கள் அதிக வருவாய் ஈட்டும் நோக்கில் போதை மருந்து கடத்தலில் ஈடுபடுகின்றனர். என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.

மரண தண்டனை வழங்குவதால் போதை மருந்து கடத்தல் ஒருபோதும் குறைந்துவிடவில்லை ஆனாலும் அரசு இதுபோன்ற குற்றங்களுக்கு தூக்கு தண்டனையை விதித்து வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஈரானில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையில் 75 சதவிகிதம் பேர் போதை மருந்து கடத்தலில் தொடர்புடையவர்கள் என மனித உரிமைகள் ஆணையம் தெரிவிக்கின்றது.

2015 ஆம் ஆண்டு தூக்கிலேற்றப்பட்ட 947 நபர்களில் 600 பேர் போதை மருந்து கடத்தல் மற்றும் அது தொடர்பான குற்றச்சாட்டில் தண்டனை பெற்றவர்கள் என இங்கிலாந்து மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

Related Posts