Ad Widget

கிணற்றிலிருந்து பெண்ணின் சடலமாக மீட்பு

நீரிவேலி பகுதியிலுள்ள தோட்டக்கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலத்தை வியாழக்கிழமை (01) மீட்டதாக, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தைச் சேர்ந்த மோகன் விஜயமாலா (வயது 41) என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புதன்கிழமை (30) இரவு நித்திரைக்கு சென்றவர், அதிகாலை காணாமல் போயுள்ளார். அதனைத் தொடர்ந்து நடத்திய தேடுதலின் பின்னர். போது, வீட்டிலிருந்து 200 மீற்றர் தொலைவிலுள்ள கிணற்றிலிருந்து குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்துக்குச் சென்ற மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி, சடலத்தை பார்வையிட்ட பின்னர், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலத்தை போதனா வைத்தியசாலைக்கு அனுப்புமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

Related Posts