Ad Widget

காரை மோதியது ரயில் : யாழ். இந்து மகளிர் கல்லூரி அருகில் விபத்து!

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்குப் பின்புறமாகவுள்ள தொடருந்துக் கடவையில் நேற்று பிற்பகல் விபத்து நடந்துள்ளது.

தொடருந்துக் கடவையைக் கடக்க முயன்ற காரை தொடருந்து மோதியதியுள்ளது.

மருத்துவர் ஒருவரின் காரே விபத்துக்குள்ளாகியுள்ளது.

கார் பலத்த சேதமடைந்துள்ள நிலையில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த புகையிரத கேற் விபத்தொன்றினால் பழுதடைந்து பூட்டமுடியாத நிலையில் இருந்தபோது இது குறித்து கடவை காப்பாளரால் பல முறையிட்டும் உடன் திருத்த நடவடிக்கை எடுக்காத புகையிரத அதிகாரிகள் தற்போது இடம்பெற்ற விபத்தையடுத்து புகையிரத அதிகாரிகள் வருகைதந்து கடைவைக் கேற்றினை சீரமைத்தமையைக் காணக்கூடியதாக இருந்தது.

Related Posts