Ad Widget

காணாமல்போன உறவுகளைத் தேடித் தருமாறு வவுனியவில் ஆர்ப்பாட்டம்

காணாமல் போன உறவுகளைத் தேடித் தருமாறு வலியுறுத்தி அவர்களின் உறவினர்கள் இன்று வவுனியா கந்தசாமி கோவில் அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

ஜனாதிபதியின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

காணாமல் போன எமது பிள்ளைகள் எங்கே?
தேர்தல் காலத்தில் மட்டுமா எங்களை ஞாபகம் வருவது?
காணாமல் போனவர்களை உடனடியாக தேடித் தாருங்கள்

என்ற கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காணாமல் போனவர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறு இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் காணாமல் போனவர்களின் உறவினர்கள் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Related Posts