காணாமற் போகச்செய்யப்பட்ட சுமார் 5 ஆயிரம் பேரின் விவரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்று ஐ.நா. செயற்குழு பிரதிநிதிகள் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த மற்றும் காணாமற் போகச்செய்யப்பட்டோரின் பெற்றோர்கள் ஒன்றியம் அந்த அறிக்கையை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள குறித்த குழுவிடம் கையளித்துள்ளது.
குறித்த அறிக்கையில் காணாமற் போகச்செய்யப்பட்டோர் தொடர்பிலான பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அந்த ஒன்றியத்தின் அழைப்பாளர் ஆனந்த ஜயமான தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை குறித்து ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்படும் என்று அந்தக் குழுவின் பிரதிநிதிகளில் ஒருவரான ஏரியல் டுலிட்ஸ்கி தெரிவித்துள்ளார்.