Ad Widget

காசோலைப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டே வரி விதிக்கும் யோசனை – ரவி கருணாநாயக்க

பணப் பரிமாற்றத்தை மேற்கொள்வதற்கென வங்கி உடன் உண்டியல் மற்றும் காசோலைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் பொருட்டே பண மீளெடுப்புக்களின் போது வரி விதிக்கும் யோசனை, முன்வைக்கப்பட்டதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

வரவு- செலவுத் திட்டத்தில் ஒரு மில்லியன் தொடக்கம் 10 மில்லியன் வரையான பண மீளெடுப்புக்களின் போது, 2 சதவீதமும், 10 மில்லியனுக்கு மேற்பட்ட பண மீளெடுப்புக்களுக்கு மூன்று சதவீத வரியும் விதிக்கப்படும் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, செயற்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்குகளில் உள்ள அனைத்து நிதிகளையும், திரள் நிதியத்துக்கு எதிர்வரும் ஜனவரி முதல் மாற்றும் யோசனையும் முன்வைக்கப்பட்டிருந்தது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த நிதியமைச்சர், செயற்பாட்டில் இல்லாத வரைக்குமே, பணமானது திரள் நிதியத்தில் இருக்கும். வாடிக்கையாளர், தனது வங்கிக் கணக்கை மீளச் செயற்படுத்த விரும்பினால், மத்திய வங்கி பணத்தை விடுவிக்கும். இதன் மூலம் பணத்தை பறிமுதல் செய்வதாக அர்த்தப்படாது என அவர் தெரிவித்தார்.

Related Posts