திருகோணமாலையில் இருந்து 400 கிலோமீற்றர் தூரத்திலும், காங்கேசன்துறையில் இருந்து 200 கிலோமீற்றர் தூரத்திலும் வீசிக்கொண்டிருக்கும் நாடா புயல், தற்போது வடகிழக்கு பகுதியில் மையம் கொண்டுள்ளது.
அதனால் வடபகுதி எங்கும் கடும் மழை பெய்துவருவதுடன் கடும் காற்றும் வீசுகின்றது.
காங்கேசன்துறை கடற்பரப்பை அண்மித்த பகுதிகளில் கடற்கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ பிரிவால் வடபகுதியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.