Ad Widget

கல்வியமைச்சின் தீர்மானத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் போர்க்கொடி

ஓய்வு பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு ஆசிரியர் வெற்றிடம் நிரப்புவதற்கு கல்வியமைச்சு எடுத்துள்ள தீர்மானத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் போர்க்கொடி உயர்த்தியுள்ளது.

நூற்றுக்கணக்கான வேலையில்லாப் பட்டதாரிகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொழில்வாய்ப்பு கோரி போராட்டங்களில் ஈடுபட்டுள்ள சந்தர்ப்பத்தில் கல்வியமைச்சின் இந்த தீர்மானம் முட்டாள்தனமானது என்று அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய இராஜாங்க கல்வியமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன், ஆசிரியர் வெற்றிடங்களை ஓய்வு பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு நிரப்புவதற்கு அமைச்சரவை தீர்மானம் கொண்டுவரவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்றைய தினம கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், கல்வியமைச்சரின் இந்தக் கூற்று தொடர்பில் பதிலளித்தார்.

Related Posts