Ad Widget

கர்ப்பிணியின் தாலிக்கொடி அறுத்தவர் கைது

யாழ்ப்பாணம், தாவடி பத்திரகாளியம்மன் கோவில் வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணின் தாலிக்கொடியை அறுத்தவர் நேற்று (25) இரவு கைது செய்யப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை (26) கூறினர்.

chain-robbery

கர்ப்பிணி பெண்ணுடைய 12 பவுண் தாலிக்கொடியை, மோட்டார் சைக்கிளில் சென்ற சந்தேகநபர் அறுத்துச் சென்றுள்ளார். அறுத்துச் சென்றவரின் மோட்டார் சைக்கிள் இலக்கத்தை குறித்துக்கொண்ட பெண், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.

பெண்ணின் முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு, இணுவிலைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபரை கைது செய்ததாக பொலிஸார் மேலும் கூறினர்.

Related Posts