Ad Widget

கர்ப்பிணிப் பெண் கொலை வழக்கு: விசாரணை ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைப்பு!

ஊர்காவற்றுறை, கர்ப்பிணி பெண் கொலை வழக்குத் தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

குறித்த கொலை வழக்கு நேற்று (புதன்கிழமை) ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

நேற்றைய வழக்கு விசாரணையின் போது ஆரம்பத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணையில் தாமதம் காணப்படுவது தொடர்பாக சட்டத்தரணி ஷாலினி மன்றை வினவியிருந்தார்.

இதற்கு பதிலளித்த நீதிவான், இவ்வழக்கின் விசாரணையை ஆரம்பிப்பதற்கான அறிவுறுத்தல்களை தாம் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அனுப்பியுள்ளதாகவும், விரைவில் விசாரணைகளை அவர்கள் ஆரம்பிப்பார்கள் எனவும் தெரிவித்தார்.

குறித்த வழக்கின் குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணைகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக நீதிமன்று தெரிவித்துள்ள நிலையில், விசாரணையை ஒத்திவைத்ததுடன், அதுவரை குறித்த சந்தேகநபர் இருவரையும் விளக்கமறியலில் வைக்கவும் நீதிவான் உத்தரவிட்டார்.

Related Posts