கரவெட்டி பிரதேசத்திலுள்ள மாடுகளுக்கு கால்வாய் நோய்த் தாக்கம்

கரவெட்டி பிரதேசத்திலுள்ள மாடுகளுக்கு கால்வாய் நோய் பரவி வருவதாக கரவெட்டி பிரதேச கால்நடை வைத்தியதிகாரி புதன்கிழமை (27) தெரிவித்தார்.

கரவெட்டி பிரதேசத்திலுள்ள கிளான், குடவத்தை, துன்னாலை கிழக்கு, துன்னாலை தெற்கு, கப்புது ஆகிய கிராமங்களிலுள்ள பண்ணைகள் மற்றும் தனியார் வளர்க்கும் மாடுகளுக்கே இவ்வாறு நோய்த் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

cow-madu

இதனால் மேற்குறிப்பிட்ட பிரதேசங்களிலிருந்து பால் சேகரித்தல், கால்நடைகளை வேறு இடங்களுக்கு கொண்டு செல்லல், எரு சேகரித்தல், இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படுதல் என்பன புதன்கிழமை (27) முதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நோயுற்ற மாடுகள் உள்ள பிரதேசத்தில் மாடுகளின் நடமாட்டத்தை தவிர்த்து, மாடுகளைக் கட்டி வளர்க்கும்படியும் தெரிவித்தார்.

கால்வாய் நோய் ஏற்பட்டால், மாடுகளின் வாய்ப்; பகுதியில் உள்ள முரசு, நாக்கு போன்றவற்றில் புண்கள் ஏற்பட்டு நீர் வடிந்தபடி காணப்படும்.

மேலும், மாட்டின் குழம்பில் (கால்ப்பாதம்) புண்கள் ஏற்பட்டு மாடு நொண்டி நொண்டி நடக்கும். அத்துடன், நோய் ஏற்பட்டு ஓரிரு நாட்களுக்கு உணவு உண்ணாது சோர்வுற்ற நிலையில் காணப்படும்.

இவ்வாறான அறிகுறிகள் காணப்பட்டால், உடனடியாக கால்நடை வைத்தியதிகாரி பணிமனையுடன் தொடர்கொண்டு தெரியப்படுத்தலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி போடும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts