யாழ்ப்பாணம் கரவெட்டியில் நேற்று மாலை 4.15 மணியளவில் மினி சூறாவளி வீசியுள்ளது.
கடந்த சில நாட்களாக நாட்டில் பெய்துவரும் கனமழை மற்றும் காற்றினைத் தொடர்ந்து நேற்று மாலை 4.15 மணியளவில் அல்வாய்ப் பகுதியில் சூறாவளி தாக்கியுள்ளது.
இதனால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.