Ad Widget

கரவெட்டியில் அடையாளம் காணப்பட்ட கோவிட் -19 நோயாளிகள் மூவருடன் தொடர்புடையோரின் விவரத்தைக் கோருகிறது சுகாதாரத் துறை!

கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நேற்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் மற்றும் சிறுவன் ஒருவனுக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களின் விவரங்களை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

இவ்வாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கரவெட்டியிலுள்ள மனோகரா அல்வாயைச் சேர்ந்த ஓரே குடும்பத்திலுள்ள மூவருக்கு கொரோனா தொற்று நேற்று வியாழக்கிழமை (நவ.5) மமாலை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் கரவெட்டி மற்றும் அண்மைய பிரதேசங்களில் பல்வேறு இடங்களுக்குச் சென்று பல்வேறு நபர்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றனர்.

இவர்கள் தொடர்பான விவரங்கள் தெரிந்தவர்கள் அல்லது இவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் 24 மணிநேர அவசர அழைப்பிற்குரிய 021 222 6666 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு விவரங்களை அறியத்தரவும்.

இவ்விவரங்கள் தொடர்பான இரகசியத்தன்மை இறுக்கமாக பேணப்படும்.

இவர்கள் தொடர்பான விவரங்களை அறிவிப்பதன் மூலம் உங்களுக்கு கோரோனா தொற்று உள்ளதா எனப் பரிசோதித்து அறியவும் உங்களது குடும்பங்களையும் அயலவர்களையும் கோரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசர சேவைகளை உடனடியாக வழங்குவதற்கும் சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நோய் எமது மாவட்டத்தில் பரவாதிருக்க அச்சமின்றி சமூக பொறுப்புணர்வுடன் உங்களின் தகவல்களை வழங்கி ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்

மருத்துவர் ஆ. கேதீஸ்வரன்
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வடமாகாணம்.

Related Posts