கனேடிய தமிழ் காங்கிரஸின் தலைவரும் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினருமான ஹரி ஆனந்தசங்கரி கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
தனிப்பட்ட பயணமாக இலங்கை வந்தள்ள கனேடிய ஆளும் கட்சியியான லிபரல் கட்சியின் ஸ்காபரோ தொகுதி எம்.பியான ஹரி ஆனந்தசங்கரி ஈழத்தமிழர்களாகாக போராட்டங்களை மேற்கொண்டு வருபவர் ஆவார்.
சம்பந்தனை சந்தித்த பின் அவர் கருத்துத் தெரிவிக்கையில் –
உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில் பன்னாட்டு நீதித்துறையின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும். இதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கவேண்டும் – என்றார்.