Ad Widget

கனகராயன்குளத்தில் அடிகாயங்களுடன் ஆணின் உடல் மீட்பு

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் அடிகாயங்களுடன் ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலமாகக் காணப்பட்டவர் வவுனியா, கத்தார் சின்னக்குளத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான எஸ்.ரெனி (வயது 37) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேசன் வேலைசெய்து வரும் இவர் கனகராயன்குளம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் வீட்டில் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளார்.

வீட்டு உரிமையாளர் நேற்று நண்பகல் 2 மணியளவில் அங்கு சென்றபோது வீட்டு விறாந்ததையில் அடிகாயங்களுடன் இறந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

உடனடியாக கனகராயக்குளம் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட் நிலையில் அவர்கள் அங்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

மண்வெட்டிப் பிடி மற்றும் கொங்கிறீட் கற்களால் இவர் தாக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts