Ad Widget

கத்திக் குத்தில் குடும்பஸ்தர் பலி: இருவர் கைது

கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக, 3 பிள்ளைகளின் தந்தையொருவர் உயிழந்தமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை (17) மாலை இடம்பெற்ற குடும்பத் தகராறில், கத்திக் குத்துக்கு இலக்காகி 3 பிள்ளைகளின் தந்தையான ராசலிங்கம் சாந்தரூபன் ( 28 வயது) என்பவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது கிளிநொச்சி ஆதார வைத்திசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts