Ad Widget

கணவரை இராணுவத்தினரிடமே ஒப்படைந்தேன் அவரை மீட்டுத் தாருங்கள்,ஆணைக்குழுவின் முன்னால் ஒலித்த குரல்

regan-wifeயாழ்ப்பாணத்தில் இன்று காலை ஆரம்பமான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணைக்கு சாட்சியமளிக்க வருகை தந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் மருத்துவப் பிரிவுப் பொறுப்பாளராக இருந்த றேகா (ரேகன்) என்பவரை இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் சிறிலங்கா இராணுவத்தினரிடம் தாம் ஒப்படைந்ததாக அவரது மனைவி தெரிவித்தார்.

இன்று காலை ஆரம்பமான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணைக்கு சாட்சியமளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில்,

யுத்தத்தின் இறுதிக்கட்ட இராணுவத்தினர் ஒலிபெருக்கி மூலம் விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்களை சரணடையுமாறு தெரிவித்து வந்தனர்.

இதன் காரணமாக கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் நானும் எனது கணவரும் பிள்ளைகளுமாக இராணுவத்தினரிடம் சரணடைந்தோம்.

எனது கணவரைப் தனியாகவும் என்னை தனியாகவும் விசாரணை மேற்கொண்ட இராணுவத்தினர், எனது கணவரை வைத்தியர் சிவபாலன் மற்றும் விடுதலைப் புலிகளின் துணை மருத்துவப் பொறுப்பாளராக இருந்த மனோஜ் என்பவருடன் ஒரு வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

நாம் தனியாக ஒமந்தைச் சோதனைச் சாவடிக்குக் கொண்டு வரப்பட்ட போது அங்கு ஒரு வாகனத்தில் எனது கணவரும் மேற்குறிப்பிட்ட இருவரும் அமர்ந்திருப்பதை நான் அவதானித்தேன். பின்னர் எனது கணவர் வாகனத்திலிருந்து இறக்கப்பட்டு ஒரு உயரதிகாரிக்கு முன்னால் விசாரணைக்குட்படுத்தப்பட்டதை நான் கண்டேன். அப்போது என்னை வட்டுவாகல் பிரதேசத்தில் விசாரணை நடத்திய அதிகாரியும் எனது கணவர் அங்கே இருக்கின்றார் எனக் காட்டினார். நான் அவருடன் கதைக்க முடியுமா என குறித்த இராணுவ அதிகாரியிடம் கேட்டேன் அதற்கு அவர் கதைக்க முடியாது என தெரிவித்தார்.

எனது கணவருடன் கதைத்துக் கொண்டிருந்த இராணுவ அதிகாரியை என்னால் அடையாளம் காட்ட முடியாது. ஆனால் வட்டுவாகலில் எனது கணவரை ஒப்படைத்த இராணுவ அதிகாரியை அடையாளம் காட்ட முடியும் என்று அவர் தெரிவித்தார்.

எனது அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்ட நிலையில் தான் நான் தற்போது வாழ்ந்து வருகின்றேன். எனது அன்றாட வாழ்க்கையினை கொண்டு செல்ல மிகவும் கஸ்ரப்படுகின்றேன், கணவர் காணமற்போனதில் இருந்து நான் பல துன்பங்களை எதிர்நோக்கி வருகின்றேன். எனது வீடு கிளிநொச்சியில் இருக்கின்றது அதனையும் இராணுவத்தினர் பறித்து வைத்துள்ளனர் என அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Related Posts