Ad Widget

கணக்கீடு நியமனம் தொடர்பான செயலமர்வு

Accounts-meetingவடமாகாண அரச திணைக்கள சிரேஸ்ட கணக்காய்வாளர்களுக்கு கணக்கீடு நியமனம் தொடர்பான செயலமர்வு நேற்று நடைபெற்றது.

யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் நேற்று ஆரம்பமாகியுள்ள இச்செயலமர்வு இரு நாட்கள் கொண்ட அமர்வாக நடைபெற்று வருகின்றது.

முதல் செயலமர்வில், இலங்கை கணக்கீட்டு நியமத்தில் உள்ள சொத்துக்களும் உபகரணங்களும், காசுப் பாய்ச்சல் கூற்று பொதுநாட்குறிப்பேடு, நாளேடுகள், நாளேடுகளை கட்டுப்படுத்தல் தொடர்பாக இலங்கை கணக்கீட்டு நியமத்தின் ஆலோசக வல்லுநர்கள் விளக்கமளித்தனர்.

இன்று நடைபெறவுள்ள இரண்டாம் நாள் செயலமர்வில், கணக்கீட்டு கொள்கைகள், கணக்கீட்டு எதிர்பார்க்கைகளின் மாற்றங்களும் தவறுகளும், நிதிக்கூற்றுக்கள், பற்றுக்கிரயம், கணக்கீடு சமர்ப்பிக்கப்படும் திகதி, சொத்துக்கள், பொறுப்புக்கள் நிலைகள் பற்றியும் விளக்கமளிக்கவுள்ளனர்.

இச்செயலமர்வில், வடமாகாண பிரதம செயலாளர் ரமேஸ் விஜயலக்சுமி, வடமாகாண சபை டி.சி.எஸ். முதலீட்டு கணக்காளர் ஆர்.பத்மநாதன், வடமாகாண சபையின் உள்ளக கணக்காளர் என்.இராசநாயகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Posts